Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Thursday, May 6, 2010

T20WC சூப்பர் 8 சுற்றில் மோதும் அணிகள்,T20WC LIVE





20 ஓவர் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.இதில் 12 நாடுகள் பங்கேற்றன. தரவரிசை அடிப்படையில் அவை நான்குபிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுநாடுகள் இடம்பெற்றன.

»

Friday, April 30, 2010

இருபதுக்கு இருபது உலக கோப்பை போட்டி அட்டவணை-2010-T20WC-LIVE


கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிகளின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, குரூப் பிரிக்கப்பட்டுள்ளது இதில் தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து அணிகள் புதியதாக சேர்க்கப்பட்டு பன்னிரென்டு அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பார்படோஸ்(கென்சிங்டன் ஓவல்),கயானா புரோவிடன்ஸ் ,செயின்ட் லூசியா (பியூஸ்ஜோர்) ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் மொத்தம் 27ஆட்டங்கள் நடக்கயுள்ளது.


A. பாகிஸ்தான் (A1), வங்காளதேசம் (A2), ஆஸ்திரேலியா

B. இலங்கை (B1), நியூசிலாந்து (B2), ஜிம்பாப்வே

C. தென்ஆப்பிரிக்கா (C1), இந்தியா (C2), ஆப்கானிஸ்தான்

D. வெஸ்ட் இண்டீஸ் (D1), இங்கிலாந்து (D2), அயர்லாந்து



நாள்-தேதியும் - நேரமும்-- போட்டி நடைபெறும் இடமும்


ஏப்.30 நியூசிலாந்து Vsஇலங்கை இரவு மணி 10.30 P.M , கயானா

ஏப்.30 வெஸ்ட்இண்டீஸ்Vs அயர்லாந்து, நள்ளிரவு 2.30 P.M , கயானா

மே 1 ஆப்கானிஸ்தான்Vs இந்தியா, இரவு 7 P.M , செயின்ட் லூசியா

மே 1 வங்காளதேசம்Vs பாகிஸ்தான், இரவு 11 P.M , செயின்ட் லூசியா

மே 2 இந்தியாVs தென்ஆப்பிரிக்கா, இரவு 7 P.M , கயானா


மே 2 ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான், இரவு 11 P.M , கயானா


மே 3 இலங்கை Vs ஜிம்பாப்வே, இரவு 7 P.M , கயானா


மே 3 வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து, இரவு 11 P.M , கயானா


மே 4 நியூசிலாந்து Vs ஜிம்பாப்வே, இரவு 7 P.M , கயானா


மே 4 இங்கிலாந்து Vs அயர்லாந்து, இரவு 11 P.M , கயானா


மே 5 ஆஸ்திரேலியா Vs வங்காளதேசம், இரவு 7 P.M , பார்படோஸ்


மே 5 ஆப்கானிஸ்தான் Vs தென்ஆப்பிரிக்கா, இரவு 11 P.M , பார்படோஸ்


லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களது தரவரிசையுடன் (உதாரணமாக A1, B2) சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். மாறாக தரவரிசையை பெறாத ஓர் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் போது, அப்பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ, அந்த அணியின் தரவரிசையை பெறும். இதன் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி

E பிரிவில் A1, B2, C1, D2 ஆகிய அணிகளும்,

F பிரிவில் A1, A2, C2, D1 ஆகிய அணிகளும்
இடம் பெறும்.

சூப்பர் 8 சுற்று
--------------

மே 6 A1 Vs D2, இரவு 7 P.M , பார்படோஸ்

மே 6 C1 Vs B2, இரவு 11 P.M , பார்படோஸ்

மே 7 A2 Vs C2 இரவு 7 P.M , பார்படோஸ்

மே 7 B1 Vs D1 இரவு 11 P.M , பார்படோஸ்

மே 8 C1 Vs D2 இரவு 7 P.M , பார்படோஸ்

மே 8 A1 Vs B2 இரவு 11 P.M , பார்படோஸ்

மே 9 C2 Vs D1 இரவு 7 P.M , பார்படோஸ்

மே 9 B1 Vs A2 இரவு 11P.M , பார்படோஸ்

மே 10 A1 Vs C1 இரவு 7 P.M , செயின்ட் லூசியா

மே 10 B2 Vs D2 இரவு 11 P.M , செயின்ட் லூசியா

மே 11 B1 Vs C2 இரவு 10.30 P.M , செயின்ட் லூசியா

மே 11 D1 Vs A2 நள்ளிரவு 2.30 P.M , செயின்ட் லூசியா


மே 13 முதலாவது அரைஇறுதி, இரவு 9 P.M , செயின்ட் லூசியா

மே 14 இரண்டாவது அரைஇறுதி, இரவு 9 P.M , செயின்ட் லூசியா

மே 16 இறுதிப்போட்டி, இரவு 9 P.M , பார்படோஸ்

இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி, இறுதிபோட்டியை தூர்தர்ஷனும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் சேனல்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பல போட்டிகள் மழையால் பதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. சுழற்பந்துவீச்சாளர்கள்க்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படுள்ளது.

நேரடி ஒளிபரப்பு.



LIVE-1

LIVE-2

»

Sunday, April 25, 2010

ஐ.பி.எல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி


மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.

முதலில் களமிறங்கிய சென்னை அணி 2௦வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து .ரெய்னா அவுட்டாகாமல் 57 ரன்களுடனும்,அனிருதா அவுட்டாகாமல் 6 ரன்களும் எடுத்தனர். மோர்கல் 15 ரன்களும் தோனி 22 ரன்களுக்கும், பத்ரிநாத் 14 ரன்களுக்கும் முரளி விஜய் 26 ரன்களுக்கும், ஹெய்டன் 17 ரன்களுக்கும் அவுட்டாயினர்.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 22ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. பந்து வீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றிய ஜகடி மற்றும் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றிய போலிஞ்சர்,ரெய்னா,மோர்கல்,முரளிதரன் மும்பையை 146/9 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்கள்.



சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இவ்வளவு திறமையாக விளையாடுவார்கள் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டாது. பதற்றமான நேரத்தில் சிறப்பாக செயல்படும் டோனியே உலகின் மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் கூறியுள்ளார். கேப்டனாக டோனி செயல்படும் விதம் பிரம்மிப்பாக உள்ளது. பதற்றமான நேரத்தில் ரெய்னாவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்துகிறார்.

57 ரன்கள் மற்றும் 1 விக்கெட்களை எடுத்த ரெய்னா ஆட்டநாயகனாக விருதுப்பேற்றார்.


IPL 2010 Final match 60, MI vs CSK, Full Highlights in Mumbai - HD part1

»

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More